மரினா பே பகுதியில் சாலை மூடல், மேம்பட்ட பாதுகாப்பு

புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை நேரம்வரை கொண்டாட்ட நிகழ்வு நடைபெறும்.

அந்த நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு சாலைகள் மூடப்படுவதும் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரினா பே பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் திரளான பொதுமக்கள் கூட்டத்தை எதிர்பார்க்கின்றனர். இது கொள்ளைநோய் காலத்தில் திரண்ட 500,000 பேர் அளவுக்கு இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

மரினா பே பகுதிக்கு அருகிலுள்ள பல்வேறு இடங்களில் காவல்துறையினர், துணைக் காவல் படையினர், பாதுகாவலர்கள் ஆகியோர் கூட்டத்தைச் சமாளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட காவல்துறை அறிக்கை விளக்கியது.

அன்று காவல் துறைப் பிரிவுகளுடன், சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியம், அதிரடி நடவடிக்கைத் தளபத்தியம், பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு தளபத்தியம், கரையோரக் காவல் படை, போக்குவரத்து காவல்துறை, ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சுற்றுக்காவல் பணி மேற்கொள்வர்.

இவர்களுடன், அவசரநிலை பிரிவினரும் வான்வெளி வழியாக கண்காணிப்பு மேற்கொள்ளும் காவல் பிரிவினரும் இணைவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டை வரவேற்கும் கொண்டாட்டத்தில் 700 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். எனினும், புதிய ஆண்டை வரவேற்க எத்தனை காவல் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் என்பது தெரிவிக்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!