பொங்கல் திருநாளுக்குத் தயாராகும் இந்திய மரபுடைமை நிலையம்

வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம் ஒரு சுவாரசியமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 6, 7, 13 மற்றும் 14ஆம் தேதிகளில் ‘சூரியன்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பொங்கல் திருநாளின் முக்கியத்துவத்தை ஆழமாக அறிந்துகொள்ளுதல், கிராஞ்சி பண்ணையை பார்வையிடுதல், இலவசமாக கைவினைப் பொருள்களை உருவாக்குதல், பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் போன்ற அனுபவங்கள் பங்கேற்பவர்களுக்கு காத்திருக்கின்றன.

நடைபெற இருக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கட்டணம் இலவசம்.  

இந்திய மரபுடைமை நிலையத்தில் நிகழ உள்ள பொங்கல் கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, பிப்ரவரி 17ஆம் தேதி அன்று ‘கேரளாவிலிருந்து சிங்கப்பூர்’ எனும் பகிர்வு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் மலையாளச் சமூகத்தினர், தங்கள் பாரம்பரியத்தைப் போற்றும் ஏதேனும் ஒரு பொருள் அல்லது புகைப்படத்தை பகிரலாம்.

சிங்கப்பூரில் உள்ள மலையாளச் சமூகத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. அவை 2024 செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

மேல்விவரங்கள் அறிய, பொதுமக்கள் இந்திய மரபுடைமை நிலையத்தின் இணையத்தளத்தை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!