எரிபொருள் விலையை உயர்த்திய கால்டெக்ஸ், எஸ்ஸோ, ‌ஷெல்

சிங்கப்பூரில் ஆகப் பெரிய ஐந்து எண்ணெய் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.

பொருள், சேவை வரி ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஒரு விழுக்காடு கூடியது. அதனைத் தொடர்ந்து கால்டெக்ஸ், எஸ்ஸோ, ‌ஷெல் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தியிருப்பதாக ஃபியூவெல் காக்கி தளம் தெரிவித்தது.

ஃபியூவெல் காக்கி, சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் உருவாக்கிய எரிபொருள் விலையைக் கண்காணிக்கும் தளமாகும். கால்டெக்ஸ், எஸ்ஸோ, ‌ஷெல் ஆகிய மூன்றும் லிட்டருக்கு மூன்று காசு வரை எரிபொருள் விலையை அதிகரித்துள்ளன.

ஆகக் கடைசி நிலவரப்படி சீனாவுக்குச் சொந்தமான சினொபெக், எஸ்பிசி இரண்டும் தாங்கள் விற்கும் எரிபொருளின் விலையை அதிகரிக்கவில்லை.

கால்டெக்ஸ், எஸ்ஸோ, ‌ஷெல் ஆகியவற்றில் டீசல் விலை இரண்டு காசு அதிகரித்து 2.64 வெள்ளியாக உள்ளது. மூன்று நிறுவனங்கள் விற்கும் அனைத்து ரக பெட்ரோலின் விலையும் 2.78 வெள்ளியிலிருந்து 3.55 வெள்ளிக்கு இடைப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!