7.5 மீ. உயரத்திலிருந்து விழுந்த கட்டுமான ஊழியர் மரணம்

ஜூரோங் வட்டார ரயில் பாதைக்கான கட்டுமானத் தளத்தில் வியாழக்கிழமை அதிகாலை, 7.5 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்தார்.

மியன்மாரைச் சேர்ந்த அந்த 27 வயது ஊழியர், கட்டி முடிக்கப்படாத தளமேடை ஓரத்திலிருந்து அதிகாலை 2.30 மணியளவில் விழுந்தார்.

ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 75க்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

புளோக் 749 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 73ல் உதவி கோரி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைப்பு வந்தது.

‘ஜியாங்ஸி கன்ஸ்ட்ரக்‌ஷன் டெவலப்மண்ட்’ நிறுவனத்தில் பணிபுரிந்த அந்த ஊழியர், இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காயங்கள் காரணமாக அங்கு அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது. திட்ட மேம்பாட்டாளரான நிலப் போக்குவரத்து ஆணையம், விசாரணைக்கு உதவி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!