சாகச நடவடிக்கையின்போது மாண்ட மாணவர்: நிறுவனம், ஊழியர் மீது குற்றச்சாட்டு

வெளிப்புற சாகச நடவடிக்கையின்போது நிகழ்ந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, ஆங்கிலோ சீன பள்ளியைச் (தன்னாட்சி) சேர்ந்த மாணவரான 15 வயது ஜெத்ரோ புவா சின் யாங் மாண்டார்.

இந்தச் சம்பவம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று ஈசூனில் உள்ள சாஃப்ரா சாகச விளையாட்டுகள் மையத்தில் நிகழ்ந்தது.

சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டோரின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையானவற்றைச் செய்ய அந்த வெளிப்புற சாகச நடவடிக்கைகளை நடத்திய ‘கேம்லோட்’ நிறுவனமும் அதன் ஊழியரான லியூ ஃபூ லூங்கும் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சாகசத்தில் ஈடுபட்டபோது, புவா கால் தவறியதில் அந்தரத்தில் தொங்கினார்.

பிறகு, அவரைக் கீழே இறக்கிவிடும்போது அவர் சுயநினைவு இழந்தார்.

மீட்புப் பணிகளின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முறையான நடவடிக்கைகள் குறித்து பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க 35 வயது லியூவும் கேம்லாட் நிறுவனமும் தவறியதாகக் கூறப்படுகிறது.

சாகச நடவடிக்கையில் புவா ஈடுபடுவதற்கு முன்பு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யவில்லை என்று கேம்லோட் நிறுவனத்தின் வெளிப்புற சாகச நடவடிக்கைப் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான 23 வயது முகம்மது நூருல் ஹகிம் முகம்மது டின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!