சுகாதாரக் குறைபாடுகளுக்காக ‘கேஷுரினா கறி’ உணவகத்துக்கு இரண்டு வாரத் தடை

இந்திய உணவுப் பிரியர்களிடையே பிரபலமான ‘கேஷுரினா கறி’ உணவகத்தில் கரப்பான்பூச்சிகள் தென்பட்டதால், சிங்கப்பூர் உணவு அமைப்பு அதற்கு இரண்டு வாரத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

எண் 136, 138 கேஷுரினா ரோடு, செம்பவாங் ஹில் எஸ்டேட் எனும் முகவரியில் உள்ள அந்த உணவகத்தின் தடை ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை நீடிக்கும்.

உணவகத்தில் பூச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள தவறியதற்காகவும் சுகாதாரமற்ற உணவை விற்றதற்காகவும் அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு $800 அபராதமும் விதிக்கப்பட்டது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றத்துக்கும் அந்த உணவத்துக்கு ஆறு தண்டனைப் புள்ளிகள் விதிக்கப்பட்டன.

12 மாதங்களுக்குள் 12 அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைப் புள்ளிகள் பெறும் உரிமையாளரின் உரிமம் நான்கு வாரங்களுக்குத் தடை செய்யப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!