மகளைப் பாலியல் ரீதியாக மகன் தாக்கியது தெரிந்தும் புகார் அளிக்காத தாய்

தனது மகளை, மகன் பாலியல் ரீதியாகத் தாக்கியதைக் கண்ட தாய் அது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை.

அச்சம்பவம் நிகழ்ந்தபோது மகள், தனது சகோதரி என்று நினைவில் கொள்ளுமாறு மகனுக்கு நினைவூட்டி மட்டும் இருக்கிறார். அப்போது மகளின் வயது 12.

மகள் கர்ப்பமானபோது வயிற்றில் இருந்த கரு தனது மகனால் உருவானது என்று அச்சம் கொண்ட தாய், கருவைக் கலைக்க மகளை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

குற்றவாளியான 45 வயது தாய், தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 16) ஒப்புக்கொண்டார். சிறார், இளம் வயதினர் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

பிப்ரவரி மாதம் 22ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மகனுக்கு 11 ஆண்டு, 6 மாதச் சிறைத் தண்டனையும் ஏழு பிறம்படிகளும் விதிக்கப்பட்டன.

2010ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் அண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மகன், தனது சகோதரியை பாலியல் தாக்குதல், வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மகளின் அடையாளத்தைப் பாதுகாக்க குற்றம் சுமத்தப்பட்ட தாய், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் ஆகியோரின் பெயர்களை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை. தாய், மகன், மகள் மூவரும் ஒன்றாக வீவக ஈரறை வீட்டில் வசித்து வந்தனர். தாயும் மகளின் தந்தையும் விவகாரத்தானவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!