பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பகுதிநேர சமயப் போதகருக்கு சிறைத் தண்டனை, பிரம்படி

நான்கு சிறுவர்களுடன் பல்வேறு பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பகுதி நேர தன்னிச்சையான சமய போதகருக்கு 21½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 8 பிரம்படிகளும் தண்டனைகளாக செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.

35 வயதான அந்தச் சமய போதகருக்கு எச்ஐவி கிருமித்தொற்று உண்டு எனக் கூறப்பட்டது.

சாங்கி கடற்கரை அருகே காவல்துறை அதிகாரிகள் வழக்கமாக சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தபோது அவர் சிக்கினார் என்றும் அவருடைய கைப்பேசியில் சிறார் ஆபாசப் படங்கள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் சேவைக்கு $75 பணம் தருவதாக அவர் ஒரு சிறுவனுக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை அதிகாரிகள் அவரின் கைப்பேசியில் பார்த்தனர். அதனையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

18 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுடன் பாலியல் செய்கையில் ஈடுபட்டதற்காக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.

தண்டனை வழங்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற 18 குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!