சுங்க வரி, ஜிஎஸ்டி ஏய்ப்பு: இருவர் கைது

4,420 சிகரெட் பெட்டிகளுக்கான சுங்க வரி மற்றும் பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) செலுத்தாத குற்றத்துக்காக இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் ஜனவரி 31ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு 21 மற்றும் 24 வயது.

செலுத்தப்படாத சுங்க வரி, ஜிஎஸ்டி வரி இரண்டுக்குமான மொத்த தொகை $542,959 என்று சிங்கப்பூர் சுங்கத்துறை பிப்ரவரி 7ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.

அந்த இரண்டு ஆடவர்களும் இரு வெவ்வேறு அதிரடிச் சோதனைகளின்போது பிடிபட்டனர்.

முதல் அதிரடிச் சோதனை ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 74ல் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்டது.

அங்கு அந்த 21 வயது ஆடவர் வேன் ஒன்றை நோக்கி நடந்து செல்வதை அதிகாரிகள் கண்டனர்.

அந்த வேனைச் சோதனையிட்டபோது அதில் வரி செலுத்தப்படாத 2,680 சிகரெட் பெட்டிகள் இருந்தன. சிகரெட்டுகளையும் வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மற்றோர் அதிரடிச் சோதனை புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31ல் உள்ள திறந்தவெளி வாகனநிறுத்துமிடத்தில் நடத்தப்பட்டது.

அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனுக்குப் பின்னால் 24 வயது ஆடவர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

அந்த வேனைச் சோதனையிட்டபோது அதில் வரி செலுத்தப்படாத 1,740 சிகரெட் பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. சிகரெட்டுகளையும் வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!