‘இஆர்பி’ 2.0வுக்காக நேரம் செலவிடும் டாக்சி ஓட்டுநர்களுக்கு இழப்பீடு

செயற்கைக்கோள் வழி செயல்படும் மின்னிலக்க சாலைக் கட்டணம் (‘இஆர்பி’) 2.0வுக்காக டாக்சி ஓட்டுநர்கள் அவர்களது காரில் புதிதாக கருவிகள் பொருத்தி வருகின்றனர்.

புதிய கருவியைப் பொருத்த சில மணி நேரம் எடுக்கும் என்பதால் டாக்சி ஓட்டுநர்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் டாக்சி ஓட்டுநர்களுக்கு அவர்களது வாடகையில் சலுகைகள் வழங்கப்படும் என்று போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஏமி கோர் தெரிவித்துள்ளார்.

நில போக்குவரத்து ஆணையமும் தேசிய டாக்சி சங்கமும் இணைந்து புதிதாக கருவிகளை பொருத்த உதவி வருகின்றன.

தனியார் வாடகை கார்கள் ஓட்டுபவர்களும், சொந்தமாக கார்களை வைத்துள்ள ஓட்டுநர்களுக்கும் புதிய கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கட்டங்கட்டமாக ‘இஆர்பி’ 2.0வுக்காக கார்களில் புதிய கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

2025ஆம் ஆண்டு முடிவுக்குள் ஒரு மில்லியன் வாகனங்களில் புதிய கருவி பொருத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!