தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு வரிக்கழிவு

1 mins read
527da49c-d178-43c1-9f04-ced1e1b5d157
நவம்பர் 30ஆம் தேதி எல் அரிஷ் அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் ஏ-330 போக்குவரத்து விமானத்திலிருந்து நிவாரணப் பொருள்கள் இறக்கப்பட்டதைக் காட்டும் படம். வெளிநாட்டு உதவிக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வரிக்கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: கெய்ரோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் ஃபேஸ்புக்

வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளுக்கு நன்கொடை வழங்கும் சிங்கப்பூரர்கள் 100 விழுக்காடு வரிக்கழிவுக்கு கோரிக்கை விடுக்க முடியும்.

சிங்கப்பூரையும் தாண்டி வெளிநாட்டு நிவாரணப் பணிகளுக்கு உதவும் சிங்கப்பூரர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த வரிக்கழிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மனிதநேய நன்கொடைகளுக்கான வரிக் கழிவுத் திட்டம் முன்னோடித் திட்டமாக ஜனவரி 1, 2025லிருந்து டிசம்பர் 31, 2028 வரை நான்கு ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும்.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

2023ல் துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கம் போன்ற பேரிடர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினையில் உருவான மனிதாபிமான நெருக்கடி போன்றவற்றில் சிங்கப்பூரர்கள் முன்வந்து மனிதாபிமான உதவிகளை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய வரிக் கழிவை, பிளவுபட்டுள்ள உலகில் தேவைப்படுவோருக்கு உதவ சிங்கப்பூரர்களை மேலும் ஊக்குவிக்கும் என்று திரு லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்