ஜூரோங் ஈஸ்ட் வீட்டில் தீ

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீச்சம்பவத்துக்கு மெழுகுவர்த்தி அணைக்கப்படாததே காரணமாக இருந்திருக்கலாம்.

புளோக் 287ஏ ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21ல் உள்ள அந்த வீட்டிலிருந்து இருவர் வெளியேறிவிட்டனர். புகையை சுவாசித்ததற்காக வேறொருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தீ மூண்டபோது இதர மாடிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் படிக்கட்டுகளில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்த உதவினர். அதன் பின்னரே பாதிக்கப்பட்ட மாடியில் வசித்தவர்களால் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் தீ விபத்து குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!