அரசாங்க நிதி உதவித் திட்டங்களைத் தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு தண்டனை

கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க, அரசாங்க நிதி உதவித் திட்டங்களைப் பெண் ஒருவர் பல முறை தவறாக பயன்படுத்தியுள்ளார்.

நூர்காசீமா கரீம், 32, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி, மொத்தம் $3,800 பெற்றுக்கொண்டார்.

அவர் $2,600 மோசடி செய்த குற்றத்தையும் போலி ஆவணத்தை தயாரித்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.

$1,200 ஏமாற்றிய குற்றத்தைத் தாண்டி மேலும் ஐந்து குற்றசாட்டுகள் தண்டனையின்போது கருத்தில் கொள்ளப்படும்.

கொவிட்-19 காரணமாக, தன் கணவர் வேலையை இழந்துவிட்டதாக பொய்த் தகவல் சொல்லி தற்காலிக நிவாரண நிதி மூலம் $500யை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, அவர் இரண்டு முறை வேலை செய்த நிறுவனத்தின் பெயரை வைத்து போலி ஆவணங்களைத் தயாரித்து $2100 பெற்றுக்கொண்டார்.

அவருடைய இக்குற்றங்கள், குறித்து காவல்துறைக்கு அக்டோபர் 15ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.

நூர்காசீமாவுக்குப், பிப்ரவரி 28ம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!