பிணையில் இருந்தபோது கொள்ளையடித்ததாக வெளிநாட்டவர் இருவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக பிணையில் விடுவிக்கப்பட்ட பங்ளாதேஷ் நாட்டவர் இருவர், பிப்ரவரி 25ஆம் தேதி கேலாங்கில் ஆடவர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து $300ஐ கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.

மியா ஷவன், 28, அகமது முகமது ரியாஸ், 29, இருவர் மீதும் செவ்வாய்க்கிழமை தலா ஒரு கொள்ளை குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது.

லோரோங் 13, லோரோங் 15 கேலாங்கிற்கு இடைப்பட்ட சந்துப் பகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதி காலை 5.30 மணியளவில் அவ்விருவரும் காணப்பட்டனர். அங்கு ஆடவர் ஒருவரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்து $300ஐ கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து காலை 5.35 மணியளவில் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை அறிக்கை தெரிவித்தது. காயமடைந்த அந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

பிடோக் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அவ்விரு சந்தேக ஆடவர்களின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர். அவ்விருவரும் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 25ஆம் தேதி மியாவுடன் சேர்ந்து கொள்ளையடித்தபோது, அகமது $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

மியாவின் வழக்கு விசாரணைக்கு முந்திய கலந்துரையாடல் புதன்கிழமை நடத்தப்படும். அகமதின் கலந்துரையாடல் மார்ச் 1ஆம் தேதி இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!