சுவா சூ காங்கில் இருக்கும் கல்லறைக்கும் சுவா சூ காங், மண்டாய், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் அமைந்துள்ள இறந்தவர்களின் அஸ்திமாடத்திற்கும் புனித வெள்ளி, குவிங் மிங், ஹரி ராயா உள்ளிட்ட 13 உச்ச நாள்களில் ஏராளமான வருகையாளர்கள் வருவார்கள் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கல்லறைக்கும் அஸ்திமாடத்திற்கும்இறந்தவர்களுக்கு வழிபாடுச் செய்யவரும் வருகையாளர்கள் உச்ச நாள்களுக்குப் பதிலாக வேறு நாள்களில் வருமாறு பொதுமக்களை தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நாள்களில் ஏராளமான வருகையாளர்கள் வருவார்கள் என முன்னுரைக்கப்படுவதால் வரும் மார்ச் 16ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான உச்ச காலத்தில் அஸ்திமாடம் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என இதுகுறித்துப் பிப்ரவரி 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் வாரியம் தெரிவித்தது.