சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்டுவரும் டைம்ஸ் புத்தகக் கடை, பிளாசா சிங்கப்பூராவிலும் வாட்டர்வே பாயிண்டிலும் இருந்த அதன் கிளைகளை மூடிவிட்டது.
விற்பனை சிறப்பாக இல்லாததாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாலும் அக்கிளைகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிளாசா சிங்கப்பூரா, வாட்டர்வே பாயிண்ட் ஆகியவற்றின் உரிமையாளர்களான ‘கேப்பிட்டாலேண்ட்’ மற்றும் ‘ஃபிரேசர்ஸ் புரோப்பர்ட்டி’ நிறுவனங்கள் அக்கிளைகள் மூடப்பட்டதை உறுதிசெய்துள்ளன.
சிங்கப்பூரில் டைம்ஸ் புத்தகக் கடையின் எஞ்சியுள்ள ஒரே கிளை ஹாலந்து ரோட்டில் உள்ள கோல்டு ஸ்டோரேஜ் ஜெலிட்டாவில் செயல்பட்டு வருகிறது.
டைம்ஸ், சிங்கப்பூரில் அதன் எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் கருத்துரைக்க மறுத்துவிட்டது. அண்மையில் மலேசியாவிலும் பல கிளைகளை அது மூடிவிட்டது.