எஸ்பிஎஸ் டிரான்சிட் நிகர லாபம் 1.5% அதிகரிப்பு

போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் சென்ற ஆண்டுக்கான நிகர லாபம் $69.1 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது. இது 1.5 விழுக்காட்டு உயர்வாகும்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் அந்நிறுவனத்தின் ஆக அதிக லாபம் இது.

2023 டிசம்பர் 31ல் முடிவடைந்த முழு ஆண்டுக்கான வருவாய் 0.8 விழுக்காடு அதிகரித்து $1.52 பில்லியன் ஆனதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

அந்நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் போக்குவரத்துப் பெருநிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ, சிங்கப்பூர் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) வருவாய் நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்தது.

மொத்த செலவு 1.1 விழுக்காடு அதிகரித்து $1.45 பில்லியனைத் தொட்டது என்றும் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை ஏற்றம் அதற்குக் காரணம் என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.

எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மூலமான வருவாய் 0.4 விழுக்காடு அதிகரித்து $1.47 பில்லியனைத் தொட்டது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி சிம், “பெருந்தொற்றில் இருந்து சிங்கப்பூர் வழக்கநிலைக்குத் திரும்பி இருக்கும் வேளையில், பயணங்களின் எண்ணிக்கை மீண்டிருப்பதைக் காண்கிறோம்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!