சிங்கப்பூர் தொழிற்சாலையை மூடவுள்ள டெட்ரா பேக்; 300 ஊழியர்கள் பாதிப்பு

உணவு பதப்படுத்துதல், பொதியாக்க நிறுவனமான ‘டெட்ரா பேக்’, ஜூரோங்கில் இயங்கிவரும் அதன் ஆலையை மூடவுள்ளது.

இதனால் சிங்கப்பூரைச் சேர்ந்த சுமார் 300 ஊழியர்கள் பாதிப்படைவர் என்று கூறப்படுகிறது.

மாறிவரும் சந்தைச் செயல்பாடுகள் காரணமாக அடுத்த 12 மாதங்களில் வட்டார நாடுகளில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்குள் சிங்கப்பூர் சார்ந்த தன் பொதியாக்கப் பொருள் உற்பத்தியை ஒருங்கிணைப்பதாக நிறுவனம் பிப்ரவரி 27ஆம் தேதியன்று தெரிவித்தது.

உணவு பானங்கள் மற்றும் சார்புத் தொழிலாளர்கள் சங்கத்தில் சிங்கப்பூரின் டெட்ரா பேக் ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவுவது தொடர்பில் சங்கம் நிறுவனத்துடன் அணுக்கமாகச் செயலாற்றி வருவதாகக் கூறியது.

இதன்படி ஆட்குறைப்பு ஆதரவுத் தொகுப்புத் திட்டங்களுக்கு ஊழியர்கள் தகுதிபெறுவர்.

இந்நிலையில், சிங்கப்பூர் சந்தைக்குத் தான் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளதாக ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கேட்ட கேள்விக்கு டெட்ரா பேக் தெரிவித்தது.

வர்த்தக மேலாண்மை, மனிதவளம், விளம்பரப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கெனத் தொடர்ந்து இங்கு அதன் அலுவலகத்தை நடத்திவரும் என்றது டெட்ரா பேக் நிறுவனம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!