2030ஆம் ஆண்டு வரை ஜிஎஸ்டி உயராது: லாரன்ஸ் வோங் அறிவிப்பு

பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) 2030ஆம் ஆண்டு வரை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றிய அவர், “இப்போதிருந்து 2030ஆம் ஆண்டு வரை நாம் நல்ல நிலையில் இருப்போம்,” என்றார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸல் புவா எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையில் திரு வோங் இவ்வாறு தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டு வரை இனியும் ஜிஎஸ்டியை உயர்த்துவதற்கான அவசியம் ஏதும் உள்ளதா என்று அவர் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த திரு வோங், “ஜிஎஸ்டியை 7 விழுக்காட்டிலிருந்து படிப்படியாக 9 விழுக்காட்டுக்கு உயர்த்தியது, வருவாய்க்கும் செலவுக்கும் இடையில் உள்ள நிதிப் பற்றாக்குறையை நிரப்புவதற்காகத்தான்.

“அந்த வகையில், 2030ஆம் ஆண்டு வரையிலான இடைவெளியை நாம் நிரப்பிவிட்டோம். எனவே, அதுவரை ஜிஎஸ்டியை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!