வருமான அதிகரிப்பால் டைசன் நிறுவன ஆட்சேர்ப்பு 35% கூடியது

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான டைசன் சிங்கப்பூரின் 2023ஆம் ஆண்டு உலகளாவிய வருமானம் 7.1 பில்லியன் பவுண்டாக (S$12 பில்லியன்) அதிகரித்துள்ளது.

இதன் பயனாக, அது தனது ஆட்சேர்ப்பு விகிதத்தை 35% அதிகரித்து மொத்தம் 1,920 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது.

டைசன் சிங்கப்பூர் நிறுவனத்தின் வருமானம் 9% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் வட்டி, வரி, மதிப்பிறக்கம் ஆகியவற்றுக்கு முந்தைய வருமான அதிகரிப்பு 1.4 பில்லியன் பவுண்டு என்று கணிக்கப்படுகிறது.

இவை ஒருபுறமிருக்க, டைசன் நிறுவனம் தனது நீண்டகால முதலீடுகள் அதிகரித்ததுடன், ஆய்வு, மேம்பாட்டுக்கான செலவினத்தையும் 2023ஆம் ஆண்டில் 40 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. இதையும் கணக்கில் கொண்டால் அந்த நிறுவனத்தின மொத்த முதலீடு 2 பில்லியன் பவுண்டுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்படுகிறது.

டைசன் நிறுவனத்தின் வருமான அதிகரிப்புக்கு முக்கிய காரணம் அதன் அழகு சாதனப் பொருள்களின் விற்பனை அதிகரிப்பு என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!