காப்புறுதி நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் 2023ஆம் ஆண்டில் அதிகித்துள்ளன.
அதே சமயம் நிதி ஆலோசகர்களுக்கு எதிரான புகார்கள் குறைந்துள்ளன.
ஆயுள் காப்புறுதி நிறுவனங்களின் சந்தை நடைமுறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பில் 2023ஆம் ஆண்டு 51 புகார்கள் அளிக்கப்பட்டன. இது அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 38% அதிகம்.
நிதி ஆலோசகர்களுக்கு எதிராக 16 புகார்கள் மட்டுமே அளிக்கப்பட்டன. இது அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 45 விழுக்காடு குறைவு என்று நிதித் துறை சர்ச்சைகள் தீர்வு மையம் தெரிவித்தது.
பொருத்தமற்ற பரிந்துரைகளை முன்வைப்பது, தவறான விளக்கம் அளித்தல் முக்கிய தகவல்களை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது முதலியவற்றை ஒழுங்கின்மை நடவடிக்கைகளாக மையம் கருதுகிறது.
உரிமம் பெற்ற நிதி நிலையங்களுடன் ஏற்படும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண பயனீட்டாளர்களுக்கு மையம் உதவுகிறது.