கதவில் சாயம் தெளிப்பு; ‘கடைசி எச்சரிக்கை’ சீட்டு ஒட்டிவைப்பு

ஈசூன் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டின் கதவு, கம்பி சட்டம் ஆகியவற்றில் சாயம் தெளிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறைக்கு பிப்ரவரி 29 தகவல் தெரிவிக்கப்பட்டது..

இதைத் தொடர்ந்து 24, 20 வயதுடைய இரு ஆடவர்கள் வெவ்வேறு கடன்தொல்லை சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

இது குறித்த முதல் சம்பவத்தில் காவல் துறைக்கு பிப்ரவரி 28ஆம் தேதி தகவல் கிடைத்தது. அதில் கேன்பரா ஸ்திரீட்டிலுள்ள ஒரு வீட்டின் கதவிலும் கம்பி சட்டத்திலும் நீலநிற சாயம் தெளிக்கப்பட்டிருந்தது.

காவல் துறை மேற்கொண்ட விசாரணை, காவல் துறை கேமராக்களில் இருந்த படங்களின் மூலம் உட்லண்ட்ஸ், பிடோக் காவல் துறை அதிகாரிகள், 24 வயது ஆடவரை கிங்ஸ் ஜார்ஜ் அவென்யூவில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆடவர் சிங்கப்பூர் முழுவதும் பல கடன்தொல்லை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டாவது சம்பவத்தில் ஈசூன் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டின் கதவு, கம்பிச் சட்டம் ஆகியவற்றில் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் சாயம் தெளிக்கப்பட்டிருந்தது.

சைக்கிள் வண்டிக்கு போடப்படும் பூட்டு வீட்டின் கதவு கம்பிச் சட்டத்தில் மாட்டப்பட்டு ‘கடைசி எச்சரிக்கை’ என்ற துண்டுச் சீட்டும் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது.

இதில், உட்லண்ட்ஸ் பிரிவு காவல் துறை அதிகாரிகள் உட்லண்ட்ஸ் சென்ட்ரலில் 20 வயது ஆடவரை கைது செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!