சிங்கப்பூர் துறைமுகத்தில் ஃபார்டெஸ்கியு என்ற கப்பலில் உலகின் முதன் முதலான அமோனியா கப்பல் எண்ணெய் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதை சிங்கப்பூர் கடற் துறை, துறைமுக ஆணைக் கழகமும் ‘ஆஸ்திரேலிய மைனிங் கம்பெனி’ என்ற நிறுவனமும் கூட்டாக வெள்ளிக்கிழமை (மார்ச் 15) அன்று தெரிவித்தன.
சிங்கப்பூர் கொடி ஏந்திய ஃபார்டெஸ்கியு கிரீன் பைனியர் என்ற கப்பலுக்கு ஜூரோங் தீவில் உள்ள வோப்பாக் பன்யான் என்ற முனையத்தில் சோதனை அடிப்படையில் திரவ வடிவிலான அமோனியா நிரப்பப்பட்டதாக ஃபார்டெஸ்கியு நிறுவனமும் ஆணையமும் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தன.
அந்தக் கப்பலில் டீசல், அமோனியா எண்ணெய் என இருவித எண்ணெய் நிரப்பப்பட்டன. கரிம வெளியீட்டை குறைக்கும் முயற்சியாக அமோனியா போன்ற மாற்று கப்பல் எண்ணெய் பயன்பாட்டை பல கப்பல் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பரிசோதனை ஏழு வாரங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்தப் பரிசோதனையில் அமோனியா சேமிப்பு முறை, இதற்கு தேவையான இணைப்புகள், எரிவாயு எண்ணெய் விநியோக முறை, மறு வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள், கடற் பயணம் மேற்கொள்ளும் திறன் ஆகியவை சோதிக்கப்பட்டதாக அறிக்கை விளக்கியது.