வியாழக்கிழமை (மார்ச் 14) நடைபெற்ற டோட்டோ குலுக்கலில் முதல் பரிசுத்தொகையான $13.4 மில்லியனை மூவர் பிரித்துக்கொண்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட $4.5 மில்லியனைப் பெற்றனர்.
நெக்ஸ், கேன்பெரா, ஜூரோங் ஆகிய இடங்களில் இருக்கும் சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளில் இருந்து வெற்றி குலுக்கல் சீட்டுகள் வாங்கப்பட்டன.
குலுக்கலில் இடம்பெற்ற வெற்றி எண்கள் 8, 26, 34, 35, 45, மற்றும் 46. உபரி எண் 36.
வியாழக்கிழமை குலுக்கலுக்கு முந்தைய மூன்று டோட்டோ குலுக்கலில் ‘குரூப் 1’ வெற்றியாளர் எவரும் இல்லாததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை குலுக்கலில் முதல் பரிசை மூவர் பகிர்ந்தனர்.
இரண்டாம் பரிசை (குரூப் 2) 15 பேர் பகிர்ந்துகொண்டனர்.
வியாழக்கிழமை குலுக்கலில் அதிக பரிசுத்தொகையை வெல்லும் வாய்ப்பை எதிர்பார்த்து, அதற்கு முந்தைய நாள்களில் தீவின் பல பகுதிகளிலும் உள்ள ‘பிரபல’ சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளில் மக்களின் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
அடுத்த டோட்டோ குலுக்கல் திங்கட்கிழமை (மார்ச் 18) நடைபெறும். அதற்கான பரிசுத்தொகை வழக்கம்போல $1 மில்லியன்.