பேத்தியைப் பலமுறை மானபங்கப்படுத்திய 74 வயது ஆடவருக்குச் சிறை

வாரயிறுதிகளில் தனது வீட்டில் தங்கிய 8 வயதுப் பேத்தியைக் கிட்டத்தட்ட ஒன்பதுமுறை மானபங்கப்படுத்திய 74 வயது ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஜனவரிக்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே அவர் அந்தக் குற்றங்களைப் புரிந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஆடவரின் மகனான தன் தந்தையிடம் நடந்தது குறித்துக் கூறியதையடுத்து அவர் இது குறித்துக் கேட்டபோது முதியவர் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் தந்தை மீது மகன் புகாரளிக்கவில்லை. 2021 ஏப்ரலில் சிறுமி தன் வகுப்பாசிரியரிடம் நடந்ததைக் கூறினார்.

பள்ளி ஆலோசகரிடம் அவர் அதைக் கூறியதையடுத்து காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. முதியவர் தன் மீது சுமத்தப்பட்ட மானபங்கக் குற்றச்சாட்டை மார்ச் 15ஆம் தேதி ஒப்புக்கொண்டார். அவருக்கு ஈராண்டு, ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு முதியவரின் பெயரை வெளியிட அனுமதி இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!