சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் காணாமல்போன கப்பல் பணியாளரைத் தேடும் பணி

சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் காணாமல்போன கப்பல் பணியாளரைத் தேடும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் குறித்து வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

அந்நிலையம் கடல்துறை, துறைமுக ஆணையத்தால் இயக்கப்படுகிறது.

காணாமல்போனவர், லைபீரியா கொடி ஏந்திய ‘உதோப்பியா’ எனும் கப்பலில் இருந்தார்.

அவரைத் தேட கடல்துறை, துறைமுக ஆணையம், கடலோரக் காவல்படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஆணையம் கூறியது.

காணாமல்போனவர் குறித்து தகவல் அறிந்தால் அது பற்றி கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திடம் தெரியப்படுத்துமாறு அப்பகுதியில் செல்லும் மற்ற கப்பல்களிடம் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!