இனவாத வாசகத்துடன் கூடிய புகைப்படம்; சிங்கப்பூர் ஆயுதப்படை விசாரணை

சிங்கப்பூர் ஆயுதப்படை சேவையாளர்கள் பயிற்சியில் ஈடுபடுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்றில் இனவாத வாசகம் இடம்பெற்றிருப்பது குறித்து சிங்கப்பூர் ஆயுதப்படை விசாரித்து வருகிறது.

அந்தப் படம் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

‘இன்ஸ்டகிராம் ஸ்டோரிஸ்’ எனும் சமூக வலைத்தளத்தில் புதன்கிழமை (மார்ச் 13) பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தப் படத்தில், ஆறு ராணுவ வீரர்கள் சாயம் பூசப்பட்ட முகங்களுடன் காட்டுப்பகுதியில் துப்பாக்கிகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற இனவாத வாசகம், நிறம் குறைவாக உள்ளோரைத் தாழ்த்தும் விதத்தில் இருந்தது. அந்தப் படத்தைப் பதிவிட்ட ‘இன்ஸ்டகிராம் ஸ்டோரிஸ்’ பக்கம் தனிப்பட்ட முறைக்கு மாற்றப்பட்டது. அந்தப் பக்கத்தின் தோற்றப் படம் நீக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை அதன் சேவையாளர்கள் உயர்தர கட்டொழுங்கு, நேர்மையைக் கடைப்பிடிப்பதை தான் உறுதிசெய்வதாகக் கூறியது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரபூர்வமற்ற புகைப்படங்கள் எடுப்பது குறித்து தெளிவான கொள்கைகள், விதிமுறைகள் இருப்பதாக சொன்ன அமைச்சு, தரக் குறைவான வாசகங்களின் பயன்பாட்டை சிங்கப்பூர் ஆயுதப்படை பொறுத்துக்கொள்ளாது என்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!