கீழே விழுந்த ஒளிப்பதிவாளருக்கு உதவிய பிரித்தம் சிங்

ரயீசா கான் சர்ச்சை விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க அரசு நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை வந்த எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிடமிருந்து கருத்து பெற செய்தியாளர்கள் படையாகத் திரண்டனர்.

பரபரப்பான அந்தச் சூழலில் ஒளிப்பதிவாளர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

தமது சூழ்நிலையையும் பாராமல், அந்த ஒளிப்பதிவாளரைக் கைதூக்கிவிட திரு சிங் உதவிக்கரம் நீட்டினார்.

அவசரத்தில் வேறெவரும் கீழே விழுந்துவிடாமல் இருக்க, ஊடகத்தினர் தங்களுக்குத் தேவையான புகைப்படங்களை எடுத்துக்கொள்ள திரு சிங் சில வினாடிகள் நின்றார்.

“நீங்கள் புகைப்படங்கள் எடுக்க வேண்டுமா? சரி, நான் நிற்கிறேன். இல்லாவிட்டால், அனைவரும் கீழே விழுந்துவிடுவீர்கள்,” என அவர் சிரித்தவாறு கூறினார்.

ஊடகத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு ‘தம்ஸ் அப்’ காட்டிவிட்டு நீதிமன்ற வளாகத்திற்கு திரு சிங் சென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!