மலேசியாவுக்கு செல்லும் மெக்லேரன் கார்களுக்கு காப்புறுதியை நிறுத்திய ‘ஏஐஜி’

சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் மெக்லேரன் கார்களுக்கு காப்புறுதியை நிறுத்தியுள்ளது ‘ஏஐஜி’ காப்புறுதி நிறுவனம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஜோகூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று மெக்லேரன் கார்கள் விபத்தில் சிக்கின. அதில் கார்களுக்கு சேதம் ஏற்பட்டது. இருப்பினும் அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் மலேசியாவில் மெக்லேரன் கார்கள் அடிக்கடி பெரிய விபத்துகளில் சிக்கி வரும் போக்கு அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து ‘ஏஐஜி’ நிறுவனம் அதன் காப்புறுதி திட்டங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மலேசியாவில் மெக்லேரன்  கார்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு ‘ஏஐஜி’ காப்புறுதி தராது என்று தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு அரிய நடவடிக்கை என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

நிலப்போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளின்படி சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 200 மெக்லேரன்  கார்கள் இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!