சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக அமெரிக்க நீதிபதி டேவிட் வோல்ஃப் ரிவ்கின்னை அதிபர் தர்மன் சண்முகரத்னம் நியமித்துள்ளார்.
ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து திரு ரிவ்கின் சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் நீதிபதியாகச் செயல்படுவார்.
2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி வரை அவரது பதவிக் காலம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார், பொது அனைத்துலகச் சட்டத்தில் நீதிபதி ரிவ்கின்னுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது.
2015ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுவரை அவர் அனைத்துலக வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்தார்.
நீதிபதி ரிவ்கின்னின் நியமனத்தை அடுத்து, சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளும் 21 அனைத்துலக நீதிபதிகளும் உள்ளனர்.