தாயைப் போல் கையெழுத்திட்டு ஆடவர் மோசடி

கேளிக்கை கூடங்களில் உள்ள பெண்களுக்கு பூங்கொத்து, மாலை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொடுத்து கடன் பிரச்சினையில் சிக்கிய ஆடவர் தமது தாயைப்போல கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

லியூ குய் லியாங் என்னும் ஆடவர் தமது தாயின் இரு கார்களை விற்க கார் விற்பனையாளரை அணுகியுள்ளார். அப்போது விற்பனை ஆவணங்களில் தமது தாயைப் போலவே லியாங் கையெழுத்திட்டுள்ளார்.

இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது.

ஆடவர் ரோல்ஸ் ராய்ஸ் காரை 700,000 வெள்ளி, மினி கூப்பர் காரை 130,000 விற்க ஒப்புதல் அளித்தார். அதற்காக முன்பணமாக 150,000 வெள்ளி லியாங் கார் விற்பனையாளரிடம் இருந்து வாங்கினார்.

தமது கையெழுத்தை மகன் மோசடி செய்ததை அறிந்த லியாங்கின் தாய், காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் ஆடவர் குற்றம் செய்தது நிரூபமானது.

லியாங்கிற்கு 12 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். தற்போது அவர் பிணையில் உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!