2008க்குப் பிறகு அலுவலக வாடகை புதிய உச்சம்

சிங்கப்பூரில் இவ்வாண்டு முதல் காலாண்டில் அலுவலக வாடகை 15 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது.

நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் அலுவலக இடத்துக்கான மாதாந்தர வாடகை ஒரு சதுர அடிக்கு 11.42 வெள்ளியாக உயர்ந்ததென புதன்கிழமை (மார்ச் 27) ஜோன்ஸ் லேங் லசால் வெளியிட்ட தரவில் தெரியவந்துள்ளது.

கடந்த 2008 கடைசி காலாண்டிற்குப் பிறகு வாடகை இவ்வளவு அதிகரித்திருப்பது இதுவே முதன்முறை. இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முந்தைய இரு காலாண்டுகளில் வாடகை 0.5 விழுக்காடு குறைந்திருந்தது.

வணிகச் சொத்துச் சந்தையில் சிங்கப்பூர் இதுவரை பெரிய அளவிலான பாதிப்பைத் தவிர்த்துள்ளது. மேற்கத்திய நகர்களிலும் ஹாங்காங் போன்ற வட்டார நகர்களிலும் சொத்துச் சந்தைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல் காலாண்டில் அலுவலக காலியிடங்கள் 5.3 விழுக்காடாகக் குறைந்தது. அதற்கு முந்தைய மூன்று மாதங்களில் அது 5.5 விழுக்காடாக இருந்தது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் கணிப்புகளின்படி, இவ்வாண்டு 3 மில்லியன் சதுர அடிக்கும் மேலான அலுவலக இடம் நிறைவுசெய்யப்படும். கடந்த ஆண்டு நிறைவுசெய்யப்பட்ட அளவை விட இது மூன்று மடங்கிற்கும் அதிகம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!