சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் மோசடி; கோலாலம்பூரில் ஐவர் கைது

சிங்கப்பூர், மலேசியக் காவல்துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையின் விளைவாக, சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர்க் காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் அரச மலேசியக் காவல்துறையின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் கோலாலம்பூரில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் மார்ச் 20ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் வேலை மோசடிகள் மற்றும் இதர மோசடிகள் மூலம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர். இரண்டும் மாதர்களும் மூன்று ஆடவர்களுமான அவர்கள் 23 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அந்தக் கும்பல் இவ்வாண்டுத் தொடக்கத்தில் தனது மோசடி நடவடிக்கைகளைத் தொடங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர்க் காவல்துறையிடம் தெரியப்படுத்தப்பட்ட குறைந்தது 40 சம்பவங்களில் அக்கும்பலுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் S$820,000க்கும் அதிகமான பணத்தை இழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!