கோ மெங் செங்கிற்கு பொஃப்மா உத்தரவு

பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கான ‘பொஃப்மா’ எனப்படும் இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எதிர்க்கட்சி அரசியல்வாதி கோ மெங் செங்கிற்கும் அவரது மக்கள் சக்தி கட்சிக்கும் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

லம் சாங் பில்டிங் கான்டிராக்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு லம் கொக் செங்கிடம் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் விலையுயர்ந்த அன்பளிப்புகள் பெற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து அமைச்சராக ஈஸ்வரன் பதவி வகித்தபோது, திரு லம்மின் நிறுவனத்துக்கு எவ்வித ஒப்பந்தங்களையும் நிலப் போக்குவரத்து அமைச்சு வழங்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சு மார்ச் 27ஆம் தேதி தெரிவித்தது.

2021ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதிக்கும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக ஈஸ்வரன் பதவி வகித்ததாக அமைச்சு கூறியது.

அப்போது திரு லம்மின் நிறுவனத்துக்கு விலையுயர்ந்த ஒப்பந்தம் ஒன்றை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியதாக திரு கோ மார்ச் 26ல் பதிவிட்டிருப்பது உண்மையல்ல என்று அமைச்சு தெரிவித்தது.

இதையடுத்து, தமது பதிவுகளுக்கு திரு கோ திருத்த குறிப்புகளைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!