தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை: நிர்மலா சீதாராமன்

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை: நிர்மலா சீதாராமன்

1 mins read
23cf1270-1ec3-48c8-8cbb-7e2228034f82
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தன்னிடம் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு எங்களது கட்சி சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நானும் அது குறித்து 10 நாள்கள் வரை யோசித்துப் பார்த்தேன். பின்னர் போட்டியிட விரும்பவில்லை என எனது முடிவை தெரிவித்தேன். தமிழகம் அல்லது ஆந்திராவில் இருந்து போட்டியிட எனக்கு பரிந்துரை வந்தது. பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா இதனை முன்மொழிந்தார். இருந்தும் நான் போட்டியிடவில்லை என சொன்னேன்.

“மேலும், என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கான பணம் இல்லை. அதோடு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், சாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமாகப் பார்க்கப்படும். அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது,” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அவரது பதவிக்காலம் வரும் 2028ஆம் ஆண்டு நிறைவடைகிறது.

குறிப்புச் சொற்கள்