தெங்காவின் குளிரூட்டும் முறைக்கு கூடுதல் ஆறு மாத உத்தரவாதம்

தெங்கா பகுதியில் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் முறையை நிர்வகிக்கும் எஸ்பி குழுமம், கூடுதலாக ஆறு மாதங்களுக்கு உத்தரவாதம் வழங்கும்.

வீட்டுச் சாவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அல்லது டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சாவிகளைப் பெறவுள்ளவர்கள், கூடுதல் உத்தரவாதத்தைப் பெறுவர் என்று எஸ்பி குழுமம் வியாழக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தது.

குளிரூட்டும் முறைக்கு ஏற்கெனவே வழங்கப்படும் 12 மாத உத்தரவாதத்துக்கு மேலாக இது அமைகிறது.

தெங்காவில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) முதல் மூன்று திட்டங்களின்கீழ் வீடு வாங்கியவர்கள், புதிய வீடுகளில் குளிரூட்டும் சாதனங்களில் தண்ணீர் கசிவதைக் கண்டறிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மார்ச் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை, குளிரூட்டப்பட்ட தண்ணீர்ப் பயன்பாட்டுக் கட்டணம் ஒரு கிலோவாட்-மணி நேரத்துக்கு 12.2 காசாகக் குறையும் (ஜிஎஸ்டிக்கு முன்னர்) என்று எஸ்பி குழுமம் தெரிவித்தது. நடப்பு காலாண்டில் இந்த விகிதம் 13.2 காசாக உள்ளது.

குளிரூட்டும் முறைக்கான பயன்பாட்டுக் கட்டணம் காலாண்டுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படுகிறது.

கூடுதல் உத்தரவாதமும் குறைக்கப்பட்ட பயன்பாட்டுக் கட்டணமும் குளிரூட்டும் முறையைப் பயன்படுத்துவோருக்குக் கூடுதல் பயன்தரும் என்று எஸ்பி குழுமம் சொன்னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!