2026க்குள் பினாங்கில் கடல் டாக்சிகள்

ஜார்ஜ்டவுன்: 2026ஆம் ஆண்டுக்குள் மலேசியாவின் பினாங்குத் தீவில் கடல் டாக்சிகள் முழுவீச்சில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பினாங்கு தீவு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் கடல் டாக்சிகள் அறிமுகப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடல் டாக்சிகளுக்கான கட்டணம் 1.30 ரிங்கிட் முதல் (S$0.37) 15.90 ரிங்கிட் (S$4.50) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவே மலேசியாவில் வழங்கப்படும் முதல் கடல் டாக்சி சேவையாகும்.

கடல் டாக்சி சேவை தயாரானதும் அது ஆறு பயணப் பாதைகளில் சேவை வழங்கும். ஸ்ட்ரெய்ட்ஸ் கீ, வெல்டு கீ, பந்தாய் ஜெரேஜாக், பத்து மவுங் ஆகிய படகுத்துறைகளுக்கு இடையே கடல் டாக்சி சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15லிருந்து 45 நிமிடங்கள் வரையிலான இடைவெளியில் கடல் டாக்சி சேவை வழங்கப்படும் என்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஒவ்வொரு படகிலும் 20 பயணிகள், இரண்டு படகுச் சிப்பந்திகள் பயணம் செய்யலாம். மொத்தம் 14 படகுகளும் இரண்டு மீட்புப் படகுகளும் இருப்பதாக பினாங்கு மாநில அரசு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!