தன் பராமரிப்பின்கீழ் இருந்த 101 வயது மூதாட்டியைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்கு மார்ச் 28ல் 20 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த மூதாட்டியை ஐ ஐ ஆங் குத்தியதாகவும் அறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, மூதாட்டியின் அலறல் யாருக்கும் கேட்காமல் இருக்க அவரது வாயில் ஒட்டுபட்டையை ஒட்டினார்.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதியன்று மூதாட்டியை ஆங் கிட்டத்தட்ட அரை மணி நேரம் துன்புறுத்தியது கண்காணிப்பு கேமராவில் பதிவானதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
மூதாட்டியின் இடையில் ஆங் குத்தியதாகவும் வலியில் அந்த மூதாட்டி கதறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மூதாட்டியின் கைகளை ஆங் கட்டிலுடன் சேர்த்துக் கட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமது முழு எடையையும் பயன்படுத்தி மூதாட்டியின் நெஞ்சுப்பகுதியில் ஆங் முட்டிபோட்டு அமர்ந்தார். அப்போது அந்த மூதாட்டி வலியால் துடிதுடித்து அலறியபோது அவரது வாயில் ஒட்டுபட்டையை ஆங் ஒட்டினார்.
அதன்பிறகு மூதாட்டிக்கு உணவு ஊட்டப் பயன்படுத்தப்படும் குழாயை மாற்றும்போதும் அவரை ஆங் தொடர்ச்சியாகப் பலமுறை அறைந்தார்.