சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.5 டன் காய்கறி, உணவு பறிமுதல்

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.5 டன் காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சிங்கப்பூர் உணவு அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் உணவு அமைப்பும் இணைந்து இந்த கூட்டு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தன.

மார்ச் 25, 26 ஆகிய நாள்களில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வரும் காய்கறி சரக்கு வாகனங்களைக் குறிவைத்து சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையின்போது இரண்டு சரக்கு வாகனங்களில் உள்ள பொருள்களுக்கு தகுந்த ஒப்புதல்கள் இல்லை என்பதை அதிகாரிகள் அறிந்தனர்.

அதன் பின்னர் நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட 1.5 டன் உணவுப்பொருள்கள் அதிகாரிகளிடம் அறிவிக்கப்படாமல் சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

ஊசி மிளகாய், வெங்காயம், கத்தரிக்காய், பூண்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை இரண்டு வாகனங்களில் மூன்று இறக்குமதியாளர்கள் அனுமதியில்லாமல் சிங்கப்பூருக்குள் கொண்டுவந்தனர்.

சிங்கப்பூரில் உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் மட்டுமே காய்கறிகள், பழங்களை இறக்குமதி செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் இறக்குமதி செய்யும் போது தகுந்த ஒப்புதல்களை அவர்கள் பெற வேண்டும்.

காய்கறி, பழங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்பவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!