ரமலான் அலங்கரிப்பில் ரயில்கள், பேருந்துகள்

சிங்கப்பூரில் ரமலான் பண்டிகைக்காக மார்ச் 27ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை ரயில்களும் பேருந்துகளும் சிறப்பு அலங்கரிப்பில் மிளிரவுள்ளன.

அலங்காரங்கள் ரமலான் கருப்பொருளில் இருக்கும்.

நிலப் போக்குவரத்து ஆணையமும் பொது போக்குவரத்து நிறுவனங்களான எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி, கோ அகெட் ஆகியவையும் இணைந்து இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளன.

இதற்கு மலாய் மரபுடைமை நிலையமும் உதவியுள்ளது.

ஆறு ரயில் பாதைகளில் உள்ள சில ரயில்களில் ரமலான் கருப்பொருளில் இருக்கும் அலங்காரங்களைக் காணலாம்.

7, 12, 70, 99, 960 எண்களைக் கொண்ட சில பேருந்துகளிலும் அலங்காரங்களைப் பார்க்கமுடியும். இந்த பேருந்துகள் கேலாங் சந்தை, பூன்லே, கிளமெண்டி, தெம்பனிஸ், பிடோக் உள்ளிட்ட வட்டாரங்களில் பயணம் செய்பவை.

அங் மோ கியோ, லிட்டில் இந்தியா, பாய லேபார், பூகிஸ், பூன்லே, உட்லண்டஸ், தெம்பனிஸ் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரமலான் பண்டிக்கைக்கான சிறப்பு உணவுகள், தகவல்கள் பற்றிய அலங்காரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

ரமலான் கருப்பொருளில் உள்ள அலங்காரப் படங்களைப் பொதுமக்கள் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துவருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!