ஒருவரின் ஒப்புதலின்றி அவரை நிறுவன இயக்குநராக பதிவு செய்தவருக்கு $6,500 அபராதம்

நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் பணியில் ஈடுபாட்டுள்ள நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் உள்ளூர் நபரின் ஒப்புதலின்றி அவரது பெயரைப் பயன்படுத்தி மூன்று நிறுவனங்களை பதிவு செய்தார்.

அவரின் இந்தச் செயலுக்கு அந்த இயக்குநருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி $6,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கார்ப் நெர்ஜி என்ற நிறுவனத்தின் ஒரே இயக்குநராக செயல்படும் லி பாவ்சு, 41, அந்த உள்ளூர் நபர் மூன்று நிறுவனங்களும் பதிவு செய்யப்படும்போது இயக்குநராகப் பணிபுரிய ஒப்புக்கொண்டதாக கணக்கியல், நிறுவன கட்டுப்பாட்டு ஆணையத்திடம் தெரிவித்திருந்தார்.

நிறுவனச் சட்டத்தின்படி, சிங்கப்பூரில் பதிவு செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் இயக்குநர்களில் குறைந்தது ஒருவராவது உள்ளூரில் தங்கியிருப்பவராக இருக்கவேண்டும்.

திருவாட்டி லி சிரத்தையுடன் கடமையாற்றத் தவறிய இரு குற்றச்சாட்டுகளின்பேரில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி தண்டிக்கப்பட்டார்.

இதுபற்றி விசாரித்த ஆணையம் திருவாட்டி லி வேறொரு நபர் மூலமாக அந்த உள்ளூர்வாசியின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அந்த உள்ளூர்வாசி உண்மையில் தமது ஒப்புதலை வழங்கினாரா என்பதை சுயமாக தெரிந்துகொள்ளவில்லை என்று தனது அறிக்கையில் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!