தைவான் நிலநடுக்கம்: சிங்கப்பூரர்கள் இருவரைக் காணவில்லை

தைவானில் ஏப்ரல் 3ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏப்ரல் 5ஆம் தேதி கருத்துரைத்த வெளியுறவு அமைச்சு, தைப்பேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் அணுக்கத் தொடர்பில் இருப்பதாகக் கூறியது.

மேலும் இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சு, காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களுக்கு தூதரக உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

இதில் நிலைமையை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருவதாக அமைச்சின் பேச்சாளர் விளக்கினார்.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஏப்ரல் 4ஆம் தேதி 71 வெளிநாட்டவர் மீட்கப்பட்டனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கூறியது. இதில் சிங்கப்பூரர்கள் எண்மரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களில் இருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் தேவையான உதவி வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்தது.

தைவானிய அதிகாரிகளால் மீட்கப்பட்ட எண்மர் பற்றி வெளியுறவு அமைச்சு அறிந்துள்ளதாகவும் அவர்களுக்கு தூதரக உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!