சிங்கப்பூரில் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மார்ச் 31ஆம் தேதிக்கும் ஏப்ரல் 6ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 416ஆகப் பதிவானது.
அதற்கு முந்தைய வாரத்தைவிட இது 67 அதிகம்.
2024ஆம் ஆண்டின் முதல் 14 வாரங்களில் 5,500 பேருக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
மார்ச் மாதம் 25ஆம் தேதி நிலவரப்படி டெங்கி பாதிப்பு காரணமாக ஏழு பேர் மாண்டுவிட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்.
2023ஆம் ஆண்டில் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,949ஆகப் பதிவானது. அவ்வாண்டில் டெங்கி காரணமாக ஆறு பேர் மாண்டனர்.
தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரில் 90 வட்டாரங்களில் டெங்கி பாதிப்பு கடுமையாக உள்ளது.
அவற்றில் 20 வட்டாரங்களில் 10 அல்லது அதற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.