ஊழியர்கள் சம்பள பாக்கி: ‘இமார்ட்’ 24 அக்கம்பக்க கடை மீது விசாரணை

ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை எனக்கூறி ‘இமார்ட்24’ எனப்படும் தென்கொரிய அக்கம்பக்க கடைமீது புகார் வந்துள்ளது.

இதையடுத்து, அதன்மீது விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மனிதவள அமைச்சின் சச்சரவுகளுக்கு சமரசத் தீர்வு காணும் முத்தரப்பு கூட்டணி அமைப்பு, தன்னிடம் ‘இமார்ட்24’ அக்கம்பக்க கடையின் 15 முன்னாள் சிங்கப்பூர் ஊழியர்கள் புகார் அளித்திருப்பதாகக் கூறியது.

இதில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தான் உதவி வருவதாகவும் தற்பொழுது 5 ஊழியர்களுடன் ‘இமார்ட்24’ சமரசத் தீர்வு கண்டுள்ளது என்றும் அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“மற்ற ஊழியர்கள் தொடர்பான புகாரில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றும் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இதில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுமானால், அவர்கள் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகத்தை அணுகலாம் என்றும் அது கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!