கார் மோதியதை அடுத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட 12 வயது மாணவி

புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான ‘ஸீப்ரா கிராசிங்’கில் மோதியது

புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளிக்கு அருகே காரால் மோதப்பட்ட 12 வயது மாணவி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இவ்விபத்து புக்கிட் பாத்தோக் சென்ட்ரலை நோக்கிச் செல்லும் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21ல் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 7.05 மணியளவில் நடந்ததாகக் காவல்துறை கூறியது.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது மாணவி சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பான காணொளி எஸ்ஜி ரோட் விஜிலாண்ட் - எஸ்ஜிஆர்வி/ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

போக்குவரத்து வழிகாட்டும் ஊழியர் கை அசைத்தபின் அந்த மாணவி ‘ஸீப்ரா கிராசிங்’ எனப்படும் பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பகுதியில் ஓடுவதைக் காணமுடிகிறது.

‘ஹோண்டா வெசல்’ ரக வெள்ளை கார் மோதியதை அடுத்து அச்சிறுமி தூக்கி எறியப்பட்டதும் அதில் பதிவாகியுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் உடனே அச்சிறுமியை நோக்கி ஓடிவந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஷின் மின் நாளேட்டிடம் கூறினார்.

இவ்விபத்து தொடர்பில் கார் ஓட்டுநரான 50 வயது ஆடவர் விசாரணையில் உதவிவருவதாகக் காவல்துறை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!