மரம் மீது பேருந்து மோதியதில் 58 வயது ஓட்டுநர் மரணம்

உட்லண்ட்சில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) காலை எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்று நடைபாதையில் ஏறி மரத்தின் மீது மோதிய விபத்தில் 58 வயது பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்எம்ஆர்டி பேருந்துகள் துணை நிர்வாக இயக்குநர் வின்செண்ட் கே, உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவத்தை நோக்கி உட்லண்ட்ஸ் அவென்யூ 2 வழியாக சேவை எண் 911 சென்றுகொண்டு இருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

அப்போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை என்றார் அவர்.

“எங்களுடைய பேருந்து ஓட்டுநர் மரணம் அடைந்ததை அறிந்து நாங்கள் மிகுந்த சோகத்தில் உள்ளோம். சிரமமான இந்த நேரத்தில் அவருடைய குடும்பத்தாருக்கு ஆதரவளிப்பதே எங்களது முன்னுரிமை,” என்று திரு கே கூறினார்.

இந்த விபத்து குறித்து காலை 9.25 மணி மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. அந்த ஆண் பேருந்து ஓட்டுநர் கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இல்லை. மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

விபத்துக்குப் பிந்தைய நிலவரத்தைக் காட்டும் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் பகிரப்பட்டன. அவற்றில், எஸ்எம்ஆர்டி பேருந்தின் முன் கண்ணாடி நொறுங்கி இருந்ததைக் காண முடிந்தது.

விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!