நோன்புப் பெருநாள், மே தினக் கொண்டாட்டங்களுக்காக இஸ்தானா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் பொது வரவேற்பு தினத்தில் நேரடி நிகழ்ச்சிகள், உணவுக் கடைகள், இஸ்தானா வழிகாட்டி சுற்றுலா உள்ளிட்ட நடவடிக்கைள் இடம்பெறும்.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலாசார நடன அங்கங்களைப் படைப்பர்.
இஸ்தானா திடலுக்குள் நுழைய சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம்.
இதர வருகையாளர்கள் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு $20யும் நான்கு முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு $10யும் செலுத்த வேண்டும். நான்கு வயதுக்கீழ் உடைய சிறார்களுக்கு அனுமதி இலவசம்.
ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள பிரதான வாயில் வழியாக வருகையாளர்கள் இஸ்தானா திடலுக்குள் நுழையலாம். அருகிலுள்ள எம்ஆர்டி நிலையம் டோபி காட்.