கிளார்க் கீ விபத்தில் கார் கவிழ்ந்தது; ஆடவர் கைது

மத்திய கிளார்க் கீ பகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு கார் ஒன்று குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. இதில், மதுபானம் அருந்தி கார் ஓட்டியதாக 43 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறையினர், இரு கார்கள் தொடர்பான புகார் தங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி இரவு ஏறத்தாழ 8 மணிக்கு கிடைத்ததாக தெரிவித்தனர். அந்த இரு கார்களும் இயூ டோங் சென் ஸ்திரீட்டில் இருந்து விக்டோரியா ஸ்திரீட் நோக்கிச் சென்றதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

வெள்ளை நிற டொயோட்டா கார் ஒன்று குப்புறச் சாய்ந்து கிடப்பதையும் சிறு சேதத்துடன் இருந்த மற்றொரு நீலநிறக் காரையும் விபத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டின.

இதன் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

இதில் மூவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் ஆனால் அம்மூவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!