எப்சான் நிறுவன சிங்கப்பூர் நடவடிக்கைகள் குறைப்பு; 350 ஊழியர்கள் பாதிப்பு

‘சிங்கப்பூர் எப்சான் இன்டஸ்டிரியல்’ நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் தனது நடவடிக்கைகளில் சிலவற்றை குறைத்துக்கொள்ள உள்ளது.

அது தனது திட்டமிட்ட முடிவின் ஒரு பகுதியாக அவற்றை வெளிநாடுகளில் உள்ள எப்சான் நிறுவன மற்ற ஆலைகளுக்கு மாற்றிவிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சிங்கப்பூர் ஆலையில் பணிபுரியும் கிட்டத்தட்ட 350 ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்சான் நிறுவனம் தனது அச்சு இயந்திரங்களுக்கும் திரைகளுக்கும் பெயர் பெற்றது. இந்த நிறுவனம் தற்பொழுது துவாசில் உள்ள தனது ஆலையின் நடவடிக்கைகளை 2027ஆம் ஆண்டுக்குள் குறைத்துக்கொள்ள உள்ளது. இந்த விவரங்களை அது ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியது.

ஜூரோங்கில் இயங்கும் எப்சான் நிறுவனத்தின் மத்திய கிடங்கு நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. அத்துடன், தென்கிழக்கு அசியாவின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை கவனிக்கும் அதன் வட்டார தலைமை நிலையமும் இந்த மாறுதலால் பாதிக்கப்பட்ட மாட்டாது. அவற்றின் வழக்கமான நடவடிக்கைகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் யாவும் ஜப்பானில் உள்ள எப்சான் தலைமையக உத்தரவின்படி நடக்கின்றன என்றும் இவை எப்சான் நிறுவன உலகளாவிய உற்பத்தி உத்தியின் ஒரு பகுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!