டெல்லி விமான நிலையத்தில் எஸ்ஐஏ விமானியாக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது

புதுடெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியாக ஆள்மாறாட்டாம் செய்த ஆடவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஏப்ரல் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

விமானிச் சீருடை அணிந்து 24 வயது சங்கீத் சிங், விமான நிலையத்தில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் கடற்படை விமானிச் சீருடை அணிந்திருந்ததாகவும் போலி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அடையாள அட்டையைத் தமது கழுத்தில் தொங்கவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவரை அதிகாரிகள் அணுகி விசாரித்தபோது அவர் வைத்திருந்த அடையாள அட்டை போலியானது என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த அடையாள அட்டையை சிங் ‘ பிஸ்னஸ் கார்டு மேக்கர்’ எனும் செயலியைப் பயன்படுத்தி தாமாகவே செய்ததாகவும் விமானிச் சீருடையை டெல்லியில் உள்ள ஒரு கடையில் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியாகப் பணிபுரிவதாகத் தமது குடும்பத்தினரிடம் சிங் பொய் சொல்லியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் உள்ள கல்விக் கழகம் ஒன்றில் விமானப் போக்குவரத்து விருந்தோம்பலுக்கான ஓராண்டு பயிற்சியை சிங் பூர்த்தி செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிங் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

விசாரணை தொடர்கிறது.

இதற்கிடையே, சிங் பிடிபட்டதில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தமது எக்ஸ் தளம் வாயிலாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!